Friday, June 30, 2017

மதம் பிடிக்காத நட்பு

ஒவ்வொரு ஆண்டும் நோன்புப் பெருவிழா நாளில் என் ஆருயிர் பள்ளித் தோழன் என் இல்லத்திற்கு பிரியாணி கொண்டு வந்து அன்புடன் கொடுப்பது வழக்கம்.
இந்த ஆண்டும் வந்திருந்தான். நண்பகல் செல்பேசியில் தொடர்பு கொண்டு, கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டும் என்றும், சற்று தாமதம் ஆகிவிட்டது என்றும் வருத்தம் தெரிவித்தான்.
3.30 மணிக்கு வந்திருந்தான். அவன் எப்போது என்னை சந்தித்தாலும், மாநில, தேசிய, உலக அரசியல் பற்றி பேசாமல் செல்லமாட்டான்.
இன்றும் அப்படியே, வந்தார், GDP, மாநில அரசியல், Donald Trump போன்று பலவற்றை பேசினான்.
அவன் பேச்சில் மோடி எதிர்ப்பும் மேலோங்கியது. ஏன் இப்படி கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள் என்று எனக்கு வியப்பாக இருந்தது.
அவன் என் இல்லத்திற்குள் வரும் போது, சேரனின் "பொக்கிஷம்" திரைப்படம் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. அதில் ஒரு இசுலாமிய பெரியவர் பேசிய வசனம், "மதமா? மனிதனா? என்று ஒரு நிலை வந்தால், நான் மனிதன்தான் என்பேன்" என்பார். எங்கள் நட்பிற்கும் இது என்ன ஒரு அருமையான பொருத்தம்!
அவனின் வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்பட்ட வேற்று நபர்கள் நானும் என்னுடைய மற்றொரு நண்பனும்தான். அவனுடைய மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், வேறு யாருக்கும் அவனின் இல்லத்திற்குள் செல்ல அனுமதியில்லை.

பின்னர் எங்கள் பள்ளி கால நினைவுகளை அசைபோட்டோம். மாநில, தேசிய மற்றும் உலக அரசியல் நிலவரம் போன்றவற்றில் எங்களுக்கு எப்போதும் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், பள்ளியில் தொடங்கி இன்றுவரை தொடரும் உன்னதமான நட்பில் இம்மியளவும் எவ்வித முரண்களும் இல்லை என்பதே உண்மை.

No comments:

Post a Comment