வேலூர் மாவட்டம் வள்ளி மலை புகழ் வாய்ந்த முருகன் கோயில்.
வருடந்தோறும் மாசி மாதத்தில் இங்கு 7 நாட்கள் நடைபெறும் தேர் திருவிழா
மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த திருவிழாவிற்கு சென்றிருந்த போது , சாலையில் எங்கு பார்த்தாலும்
மக்கள் கூட்டம். அவர்களுக்கு இணையாக எங்கு பார்த்தாலும் அன்னதானமும் நீர்,மோர் வழங்கவும்
ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
சாலையில் தேங்காயை உருட்டி 10 அடிக்கு ஒரு முறை மக்கள் கீழே விழுந்து
வணங்கியபடி தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தி சென்றனர்.
சாலை ஓரத்தில் மூன்று சக்கர தானியங்கி வண்டியில் ஆரஞ்சு பழத்தை மலைபோல்
குவித்து விற்றுக் கொண்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர் நான்கு ஆரஞ்சு பழங்களை உறித்து அருகில் இருந்து உடைத்துக்
கொண்டு வந்த மரக்கிளையில் செருகி "குடை ஆரஞ்ச் ""குடை ஆரஞ்ச்
" என சத்தமாக விற்கத் தொடங்கினார்.
அதுவரை மந்தமாக இருந்த விற்பனை விறுவிறுப்படைந்தது. அரை மணி நேரத்தில்
பாதியளவு ஆரஞ்சு பழங்களை விற்று விட்டனர்.
குடைமிளகாய் தெரியும். குடை ஆரஞ்சு ?
இது தான் வித்தியாசமாக எதையாவது சொன்னால் மனித மனம் அதன் பால் ஈர்க்கப்பட்டு
அது உண்மை என்று நம்பும் தன்மைக்கு எடுத்துக் காட்டு.
இங்கு பழங்களை விற்றவர் களும் வாங்கியவர்களும் கிராமத்து மனிதர்கள்.
இதே உளவியல் துணுக்கத்தைக் கொண்டே நம் உடலுக்கு இம்மியளவும் நன்மை புரியா
பல பொருட்களை பன்னாட்டு நிறுவனங்கள் நடிகர்களைக் கொண்டும், விளையாட்டு வீரர்களைக் கொண்டும்
விற்பனை செய்கின்றன.
எண்ணெய் செக்கில் தேங்காய் எண்ணெய்யை வாங்கி பயன்படுத்துவதை நிறுத்தினோம்,
முடி உதிர்வதும் நரைப்பதும் தொடங்கியது.
கடலை எண்ணெய் சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படும் என பயமுறுத்தப்பட்டு
அதை திருத்தினோம், மூட்டு வலியும் இருதய சிகிச்சை மையங்களும் பெருகின.
குடை ஆரஞ்சு என அந்த வியாபாரி விற்று அதை மக்கள் வாங்கி உண்டதால் அவர்கள்
உடலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
ஆனால் விளம்பரங்களைக் கண்டு ஆராயாமல் நாம் வாங்கி பயன்படுத்தும் பொருட்களால்
நம் உடல் நிலை கெடுவதோடு அல்லாமல் நம் அடுத்த தலைமுறையின் உடல் நிலையும் கெடுகிறது.
சிந்திப்போம்.